இரவில் பால் குடிக்கலாமா..? - இதோ உங்களுக்காக...!




டாக்டர்களில் சிலர் இரவில் பால் சாப்பிடலாம் என்கிறார்கள். இன்னும் சில டாக்டர்கள் இரவில் பால் சாப்பிடக்கூடாது என்கிறார்கள். எது சரி?

'இரவில் தூங்கச் செல்லும் முன்பு யார், யார் பால் சாப்பிடலாம், யார், யார் பால் சாப்பிடக்கூடாது என்று தெளிவான விதிமுறைகள் உள்ளன.

என்ன சாப்பிட்டாலும் உடம்பு குண்டாகமாட்டேங்குதே என்று வருத்தப்படுகிறவர்கள், இரவு தூங்கச் செல்லும் முன்பு தாராளமாக ஒரு டம்ளர் பால் சாப்பிடலாம்.

வளரும் குழந்தைகள் நல்ல உடல் வளர்ச்சி பெற இரவில் தூங்கச் செல்லும் முன்பு, ஒரு டம்ளர் பால் சாப்பிடலாம்.
பால் என்பது ஒரு வகையில் மயக்கத்தைக் கொடுக்கிற பானம். வயதானவர்கள் இரவில் சாப்பிட்டால் நன்றாகத் தூங்கலாம்.

ஆனால், உடலில் கொழுப்புச் சத்து மிகுந்தவர்கள், உடல் இளைக்க வேண்டும் என்று நினக்கிறவர்கள், உடல் உழைப்பு நிறய செய்யாதவர்கள் இரவில் பால் சாப்பிடுவதைத் தவிர்க்கலாம்.

திருமணத்திற்கு முன்பு கர்ப்பமான நடிகைகள் ஸ்ரீதேவி, சரிகா, செலினா




திருமணத்திற்கு முன்பே கர்ப்பமான பாலிவுட் நடிகைகள் யார், யார் என்று பார்ப்போம். பாலிவுட் நடிகைகளில் சிலர் திருமணத்திற்கு முன்பே கர்ப்பமாகியுள்ளனர். கர்ப்பம் தரித்ததால் அவர்கள் அவசர, அவசரமாக திருமணம் செய்து கொண்டுள்ளனர். அப்படி யார், யார் திருமணத்திற்கு முன்பு கர்ப்பமானவர்கள் என்று பார்ப்போம்.

நம்ம சிவகாசி மயிலு ஸ்ரீதேவி பாலிவுட் சென்று இந்தி பட தயாரிப்பாளரான ஏற்கனவே திருமணமான போனி கபூரை காதலித்தார். அவர் போனி கபூரை திருமணம் செய்யும் முன்பே கர்ப்பமானார். ஸ்ரீதேவி தனது திருமணம் குறித்த அறிவிப்பை வெளியிட்டபோது அவர் 7 மாத கர்ப்பம்.

இந்தி நடிகை கொங்கனா சென் நடிகர் ரன்வீர் சோரேவை திருமணம் செய்யும் முன்பே கர்ப்பமானார். அவருக்கு தற்போது ஒரு மகன் உள்ளார்.

கமல் ஹாஸன் வாணி கணபதியின் கணவராக இருந்தபோது சரிகாவுக்கும் அவருக்கம் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டது. இதில் கழுத்தில் தாலி ஏறும் முன்பே சரிகா கர்ப்பமானார்.

நடிகை செலினா ஜேட்லி தனது காதலரான ஆஸ்திரியாவைச் சேர்ந்த பீட்டர் ஹாகை திருமணம் செய்யும் முன்பே கர்ப்பம் தரித்தார். அவருக்கு இரட்டை குழந்தைகள் பிறந்தது.

கவர்ச்சி நடிகை வீணா மாலிக் கர்ப்பமானதால் தான் திடீர் என்று திருமணம் செய்து கொண்டார் என்று கிசுகிசுக்கப்படுகிறது.

இசைஞானி இளையராஜாவின் இசையில் உருவாகும் கிடாபூசாரி மகுடி




தமிழ் திரை விருட்சம் சார்பாக த.தமிழ்மணி தயாரிக்கும் முதல் படம் கிடாபூசாரி மகுடி. இப்படத்தில் அறிமுக நாயகர்களாக தமிழ், ராம்தேவ் ஆகியோரும், நாயகியாக நட்சத்திராவும் நடிக்கிறார்கள்.

முக்கிய கதாபாத்திரத்தில் சிங்கம் புலி, பவர்ஸ்டார் ஸ்ரீனிவாசன், பேராசிரியர் மு.ராமசாமி, வெவ்வாழை ராசு, போண்டா மணி, கலைராணி, கம்பம் மீனா ஆகியோர் நடித்திருக்கின்றனர்.

இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குனராக ஜெயகுமார்.ஜெ அறிமுகமாகிறார். இவர் வேலு பிரபாகரன், ராம் கிரிஷ்மிர்லானி, வியாசன் ஆகியோருடன் உதவி இயக்குனராக பணிபுரிந்துள்ளார்.

திருமணத்திற்கு முன்பு ஒரு ஆணும் பெண்ணும் பழகுவது மட்டும் காதல் அல்ல, திருமணத்திற்கு பிறகு உருவாகும் ரத்த பந்தத்தில்தான் உண்மையான காதல் உள்ளது என்ற கருத்தை மையமாக கொண்ட இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார்.

இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கடலூர் மாவட்டம் திட்டக்குடி, பெண்ணாடம், அரியலூர் மாவட்டம் மருங்கூர் குவாகம், தாமரைபூண்டி கிராம பகுதிகளில் நடைபெற்றுள்ளது.

அமெரிக்க ராப் பாடகருக்கு ஊர்வசியை விற்பனை செய்த ஏ.ஆர்.ரஹ்மான்...!

 


அமெரிக்காவில் மிகவும் புகழ்பெற்றா ராப் பாடகர் will.i.am alias William Adams. இவர் வெளியிடும் பாடல்களுக்கு அமெரிக்காவில் பெரும் வரவேற்பு இருக்கும். கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரை சேர்ந்த will.i.am alias William Adams, கடந்த 1979ஆம் ஆண்டு பிறந்தவர். 39 வயதாகும் will.i.am alias William Adams, இதுவரை பாடகர், பாடலாசிரியர், கம்போசர், பாடல் ரிக்கார்டு தயாரிப்பாளர், பின்னணி குரல் கொடுப்பவர், ராப் பாடகர், தொழிலதிபர் என பலவித அவதாரங்கள் எடுத்துள்ளார்.

இவர் தற்போது தான் புதியதாக அமைத்துக்கொண்டிருக்கும் Birthday என்னும் ஆல்பத்திற்காக ஏ.ஆர்.ரஹ்மானின் பாடல் ஒன்றின் மெட்டில் ஒரு பாடல் பாட விரும்பியுள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் 90களில் கம்போஸ் செய்த பாடல்களை வரிசையாக கேட்டுக்கொண்டிருந்த will.i.am alias William Adamsக்கு இரண்டு பாடல்கள் மிகவும் கவர்ந்துவிட்டது. ஒன்று காதலன் படத்தில் இடம்பெற்ற பேட்டை ராப் என்ற பாடல், மற்றொன்று அதே படத்தில் இடம்பெற்ற ஊர்வசி ஊர்வசி என்ற பாடல்.

ஏ.ஆர்.ரஹ்மானிடம் அனுமதி பெற்று ஊர்வசி ஊர்வசி என்னும் பாடலை தனது ஆல்பத்தில் சேர்த்துவிட்டார் will.i.am alias William Adams. அதுமட்டுமின்றி Birthday ஆல்பத்திற்காக ஊர்வசி பாடலை ஆங்கிலத்தில் பாடல் எழுதவும், இணை கம்போஸாரக இருக்கவும் ஏ.ஆர்.ரஹ்மான் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதற்காக ரஹ்மானுக்கு மிகப்பெரிய தொகை ஒன்று கொடுக்கப்பட்டுள்ளதாம்.

இதை ஏ.ஆர்.ரஹ்மானும் ஃபேஸ்புக் மற்றும் டுவிட்டரின் மூலம் உறுதிபடுத்தியுள்ளார். உலக அளவில் பிரபலமான ஒரு கம்போஸருடன் இணைந்து பணியாற்றுவதில் தான் பெருமைப்படுவதாக அவர் கூறியுள்ளார்.

பரபரப்பை ஏற்படுத்திய பாடி ஸ்பிரே விளம்பரம். டாப்சிக்கு குவியும் வாய்ப்புகள்...!




ஆடுகளம் படத்தில் அறிமுகமான நடிகை டாப்ஸி, பின்னர் தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் பிசியாக நடித்தார். ஆனால் தற்போது பாலிவுட்டில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார். தமிழில் டாப்ஸி நடித்துக்கொண்டிருக்கும் ஒரே படம் முனி 3 மட்டுமே. ஆனால் பாலிவுட்டில் சிறுசிறு கேரக்டர்களில் நடித்து பிசியாக இருக்கிறார்.

இந்தியில் தற்போது Running Shaadi‘ என்ற படத்தில் கதாநாயகியாக நடித்து டாப்ஸியின் கவனம் திடீரென விளம்பர படங்களில் நடிப்பதில் திரும்பியுள்ளது. அதற்கு இவர் நடித்த ஒரு பாடி ஸ்பிரே விளம்பரம்தான் காரணம். இவர் நடித்த பாடி ஸ்பிரே விளம்பரம் ஒன்று வெளியான ஒரே நாளில் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திவிட்டது.

பொதுவாக பாடி ஸ்பிரே விளம்பரங்களில் நடிக்கும் பெண்கள், பாடி ஸ்பிரே பயன்படுத்திய ஆணிடம் மயங்கி செல்வது போன்ற காட்சிகள்தான் இருக்கும். ஆனால் இந்த விளம்பரம் கொஞ்சம் வித்தியாசமாக இருப்பதால் பொதுமக்கள் மிகவும் ரசித்து பார்ப்பதாக சர்வே கூறுகிறது.

வட இந்தியாவின் அனைத்து தொலைக்காட்சிகளிலும் இந்த விளம்பரம் வரும் நேரங்களில் மக்கள் வேறு எதிலும் கவனம் செலுத்துவதில்லை என கூறப்படுகிறது. இந்த விளம்பரம் வெளியான பிறகு டாப்சிக்கு அடுத்தடுத்து விளம்பரங்களில் நடிக்க வாய்ப்பு குவிந்து வருகிறது.

பாபாஜியின் கிரியா யோகம்...! - உங்களுக்காக...




மாபெரும் சித்தர்களில் ஒருவரான பாபாஜி, பண்டைய பதினெண் சித்தர் மரபில் கற்பிக்கப்பட்ட யோக முறைகளைத் தொகுத்து அவற்றிலிருந்து கிரியா யோகத்திற்கு உயிரூட்டினார். அவர் வழிகாட்டிய கிரியா யோகமானது ‘கிரியாக்கள்’ எனப்படும் பல்வேறு பயிற்சிகளை 5 கிளைகளாகப் பிரித்து உட்கொண்டுள்ளது.

1. கிரியா ஹத யோகம்: உடலைத் தளர்த்திக் கொள்வதற்கான பயிற்சிகளான ஆசனங்கள், ‘பந்தங்கள்’ எனப்படும் தசைப்பூட்டுக்கள் மற்றும் உள-உடல் குறிகள்/அசைவுகளான முத்திரைகளை உள்ளடக்கியதுதான் கிரியா ஹத யோகம். இவற்றை பயிற்சி செய்வதன் மூலம் மிகுந்த ஆரோக்கியம் மற்றும் மன அமைதியை பெற முடியும். அத்தோடு, உடலில் உள்ள சக்தி மையங்களான சக்கரங்கள் மற்றும் சக்தியின் வழித்தடங்களான நாடிகளை எழுப்பவும் முடியும். பாபாஜி, மிகுந்த பயன் தரக்கூடிய குறிப்பிட்ட 18 ஆசனங்களை இதற்காக தேர்ந்தெடுத்தார். இவை பல்வேறு நிலைகளை உட்கொண்டு ஜோடிகளாகவும் கற்பிக்கப்படுகின்றது. நமது ஸ்தூல உடலை நாம் நமக்காகப் பேணாமல், இறைவனின் கோவிலுக்கான ஒரு வாகனமாகப் பேணிடல் வேண்டும்.

2. கிரியா குண்டலினி பிராணாயாமம்: இந்த சக்தி வாய்ந்த சுவாசப் பயிற்சியின் மூலம் ஒருவரது அபரிமிதமான சக்தி மற்றும் மேல்-மன விழிப்புணர்வை எழுப்பி தம் முதுகுத்தண்டின் அடிப்பகுதியில் இருந்து உச்சந்தலை வரையுள்ள ஏழு முக்கியமான சக்கரங்கள் வழியாக பாய்ச்ச முடியும். இது ஒவ்வொரு சக்கரத்துடனும் தொடர்புடைய மறைந்திருக்கும் பேராற்றலை வெளி கொணர்ந்து ஐந்து கோசங்களிலும் மிகுந்த ஆற்றல் வாய்ந்தவராக ஒருவரை மாற்றுகிறது.

3. கிரியா தியான யோகம்: படிப்படியான நிலைகளாக அமைந்துள்ள இத்தொடர் தியானப் பயிற்சி நம் மனதைக் கட்டுக்குள் அடக்கி, நமது ஆழ் மனதை தூய்மை செய்வதற்கான ஒரு விஞ்ஞான பூர்வமான கலையாகும். இதன் மூலம் மனத்தெளிவு, மனதை ஒருநிலைப்படுத்தும் திறன், தொலைநோக்கு அறிவு மற்றும் படைப்பாற்றல் வளர்வதோடு மட்டுமல்லாது மூச்சற்ற நிலையில் இறைவனிடம் ஒன்றிடும் ‘சமாதி’ நிலையில் ஆன்ம அனுபவமும் பெற இயலும்.

4. கிரியா மந்திர யோகம்: அமைதியாக மனதிற்குள் ஜெபிக்கப்படும் மெல்லிய ஒலிகளின் மூலம் உள்ளுணர்வு, அறிவாற்றல் மற்றும் சக்கரங்களை எழுப்பலாம். ஒரு மந்திரமானது, ‘நான்’ எனும் எண்ணத்தைச் சார்ந்த மனதின் செயல்பாடுகளுக்கு ஒரு மாற்றம் தந்து அபரிமிதமான சக்தியினைச் சேமிக்க வழி செய்கின்றது. அதே நேரத்தில் ஆழ் மனதின் பழக்கங்கள் தூய்மையும் அடைகின்றது.

5. கிரியா பக்தி யோகம்: நமது ஆன்மாவினுள் இறை தேடலைப் பயிர் செய்தல். பக்தி சார்ந்த செயற்பாடுகள் மற்றும் தொண்டுகளின் மூலம் நிபந்தனையற்ற அன்பு மற்றும் ஆன்மீக பரவசத்தை எழுப்பலாம். பக்தி பாடல்கள், சடங்கு-வழி வழிபாடு, தீர்த்த யாத்திரைகள் மற்றும் இறை வழிபாட்டின் மூலம் ஆண்டவனை அனைத்திலும் காண்பதினால் நமது செயல்கள் அனைத்திலும் இனிமை கலக்கிறது.

சேலத்தில் 500 கோச்சடையான் திருட்டு டி.வி.டி.க்கள் சிக்கியது...!




சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் நடித்த கோச்சடையான் பலத்த எதிர்பார்ப்புக்கு இடையே நேற்று வெளியிடப்பட்டது. படம் வெளியான 24 மணி நேரத்திலேயே அதன் திருட்டு டி.வி.டி.க்கள் சேலத்தில் வினியோகம் செய்யப்பட்டு வருவதாக ரசிகர் மன்றத்துக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து மாவட்ட தலைவர் பழனிவேல் மற்றும் ரஜினி ரசிகர்கள் சிலர் வீரபாண்டியார் நகர் ஆலமரக்காடு பகுதியில் ஒரு கேசட் கடையை கண்காணித்து கொண்டு இருந்தனர்.

அப்போது காலை 9 மணியளவில் மோட்டார் சைக்கிளில் சில பண்டல்களை எடுத்து கொண்டு முதல் தளத்தில் உள்ள ஒரு கேசட் கடைக்கு கொண்டு சென்றனர். சந்தேகம் அடைந்த பழனிவேல் மற்ற நிர்வாகிகளுக்கு தகவல் கொடுத்தார்.

இதையடுத்து அங்கு துணை தலைவர் சித்தேஸ்வரன், இணை செயலாளர் பாலகிருஷ்ணன், செயலாளர் தளபதிராம், ரஜினி பட்டதாரிகள் பேரவை ஆடிட்டர் சீனிவாச பெருமாள், முருகன், சுக்கம்பட்டி பிரபு உள்ளிட்ட ரசிகர்கள் திரண்டு வந்தனர்.

தொடர்ந்து ரசிகர்கள் அனைவரும் திரண்டு சென்று பார்த்த போது கடையில் பூபதி, மோகன் ஆகிய 2 பேர் இருந்தனர். அப்போது அவர்கள் அந்த பண்டல்களை பிரிக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த பண்டல்களில் 500–க்கும் மேற்பட்ட கோச்சடையான் திருட்டு டி.வி.டி. கேசட்டுகள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள் அவர்களிடம் எங்கு இருந்து இந்த கேசட்டுகள் வந்தது என்று கேட்டனர். அதற்கு பதில் அளித்து கொண்டே அவர்கள் நைசாக அங்கிருந்து சென்று விட்டனர்.

இதுப்பற்றி ரஜினி ரசிகர்கள் பள்ளப்பட்டி போலீசுக்கும் தகவல் கொடுத்தனர். இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் விரைந்து வந்தனர். அவர்களிடம் ரசிகர்கள் கோச்சடையான் திருட்டு டி.வி.டி.க்களை ஒப்படைத்தனர். மேலும் இதே போல் சுவர்ணபுரி பகுதியிலும் ஒரு கடையில் கோச்சடையான் கேசட் விற்கப்படுவதாக தெரிவித்தனர்.

இதையடுத்து போலீசார் அந்த கேசட்டுகளை அள்ளி சென்றனர். அந்த கடையையும் பூட்டினர். மேலும் இது தொடர்பாக ரஜினி ரசிகர் மன்றத்தினர் போலீசில் புகார் மனு கொடுத்தனர். மேலும் இது தொடர்பாக போலீஸ் கமிஷனர் அலுவலகத்திலும் புகார் கொடுத்தனர்.

இதுகுறித்து ரஜினி ரசிகர் மன்ற மாவட்ட தலைவர் பழனிவேல் கூறியதாவது:–

மிக பெரிய பட்ஜெட்டில் பிரமாண்டமாக தயாரிக்கப்பட்டு வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கும் தலைவர் ரஜினியின் கோச்சடையான் படம் வெளியான 24 மணி நேரத்தில் சேலம் மாவட்டம் முழுவதும் திருட்டு டி.வி.டிக்கள் விற்பனை செய்யப்படுவதாக பல இடங்களில் ரசிகர்களிடம் இருந்து எனக்கு தகவல் கிடைத்தது. அதுவும் மோட்டார் சைக்கிள்களில் கொண்டு வரப்பட்டு கடைகளில் பதுக்கப்படுவதாகவும் கூறினர்.

இதையடுத்து நான் காலை 6 மணிக்கே இந்த பகுதியில் வந்து ஒரு கேசட் கடையை கண்காணித்து கொண்டு இருந்தேன். அப்போது மோட்டார் சைக்கிளில் பண்டல்கள் கொண்டுவரப்பட்டது. இதையடுத்து சந்தேகத்தின் பேரில் சென்று பார்த்த போது கோச்சடையான் திருட்டு கேசட் இருப்பது தெரியவந்தது. எனவே அதை பிடித்து போலீசில் ஒப்படைத்து உள்ளோம்.

இந்த சம்பவத்தில் யாருக்கெல்லாம் தொடர்பு இருக்கிறது என்றும், இந்த கேசட்டுகள் எங்கிருந்து வந்தது என்றும் போலீசார் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

காய்களின் பலன்களும் அதன் மருத்துவ குணங்களும் - இதோ உங்களுக்காக...!




கத்தரிக்காய்

என்ன இருக்கு: விட்டமின் சி, மற்றும் இரும்புச் சத்து

யாருக்கு நல்லது: ஆஸ்துமாக நோயாளிகள் கத்தரிக்காயை மிளகு, சீரகம், பூண்டு சேர்த்து சமைத்துச் சாப்பிட உடல் சூட்டை தக்க வைக்கும்.

யாருக்கு வேண்டாம்: சரும நோயாளிகள், புண், ரணம் உள்ளவர்கள் சாப்பிடக்கூடாது. அரிப்பைத் தூண்டும். அறுவை சிகிச்சை செய்துள்ளவர்கள் முதல் மூன்று மாதங்கள் சாப்பிடக்கூடாது.

பலன்கள்: நரம்புகளுக்கு வலுவூட்டும் சளி, இருமலைக் குறைக்கும்.



முருங்கைக்காய்

என்ன இருக்கு: கொழுப்பு மற்றும் இரும்புச் சத்து மற்றும் விட்டமின் ஏ, சி.

யாருக்கு நல்லது: குழந்தைகள் முருங்கைக்காய் விதைகளை சாப்பிட்டால் மலக்குடல்களில் சேரும் கிருமி பூச்சிகள் வெளியேறும்.

யாருக்கு வேண்டாம்: முதியவர்கள், இதய நோயாளிகள், மூட்டு நோய் உள்ளவர்கள் சாப்பிடக்கூடாது. வாயுப் பிடிப்பை ஏற்படுத்தும்.

பலன்கள்: நரம்பு மண்டலங்களுக்கு ஊக்கம் தரும்.



மாங்காய்

என்ன இருக்கு: நார்ச்சத்து, விட்டமின் ஏ

யாருக்கு வேண்டாம்: சரும நோய், வயிற்றுவலி உள்ளவர்கள் சாப்பிடக்கூடாது. சூட்டைக் கிளப்பும்.

பலன்கள்: மாங்காய் சாப்பிட்டால் மலக்குடல் புற்றுநோய் வராமல் தடுக்கும்.
தாது பலம் பெறும். செரிமாணத்தைத் தூண்டி மலக்குடலைச் சுத்தம் செய்யும். பசியைத் தூண்டும்.



அவரைக்காய்

என்ன இருக்கு: உயர்நிலை புரதம், இரும்பு, சுண்ணாம்புச் சத்து.

யாருக்கு நல்லது: நீரிழிவு, செரிமாணத் தொல்லை, மலச்சிக்கல் உள்ளவர்களுக்கு.

யாருக்கு வேண்டாம்: யாரும் இரவில் சேர்க்க வேண்டாம். நார்ச்சத்து அதிகம் என்பதால் ஜீரணம் ஆகாது.

பலன்கள்: உடலுக்கு தேவையான புரதச் சத்தினை அளிக்கவல்லது.



அத்திக்காய்

என்ன இருக்கு : விட்டமின் சி, சுண்ணாம்பு மற்றும் இரும்புச் சத்து

யாருக்கு நல்லது : மூலநோய் உள்ளவர்களுக்கு.

பலன்கள் : மாதம் ஒருநாளாவது அத்திக்காய் அவியல் சாப்பிடுவதால் மலக்குடல் சுத்தமாகும். மூலநோய் வராமல் தடுக்கும்.



பீர்க்கங்காய்

என்ன இருக்கு : நீர்ச்சத்தும் தாது உப்புகளும்

யாருக்கு வேண்டாம் : யாரும் இரவில் சாப்பிடக் கூடாது. சளி, இருமல், தலைவலி உள்ளவர்கள் எப்போதும் சாப்பிடக்கூடாது. தலையில் நீர்க் கோத்துக் கொள்ளும்.

பலன்கள் : உடலுக்கு குளிர்ச்சியைத் தரும்.



கோவைக்காய்

என்ன இருக்கு : விட்டமின் ஏ.

யாருக்கு நல்லது : நீரிழிவு நோயாளிகளுக்கு.

பலன்கள் : வாய்ப்புண், வயிற்று ரணம், நாக்குக் கொப்புளம் ஆகியவற்றை போக்கும்.



புடலங்காய்

என்ன இருக்கு : உயர்நிலை புரதம், விட்டமின் ஏ, சுண்ணாம்புச் சத்து, கந்தகச் சத்து.

யாருக்கு நல்லது : மூலநோய் உள்ளவர்களுக்கு.

யாருக்கு வேண்டாம் : ஆஸ்துமா, மூட்டுவலி, தலைவலி, சளி மற்றும் காய்ச்சல் உடம்பில் குத்தல் குடைச்சல் உள்ளவர்கள் சாப்பிடக்கூடாது.



பாகற்காய்

என்ன இருக்கு: பாலிபெப்டுடைட் எனும் இன்சுலின் சுரப்பை அதிகப்படுத்தும் வேதிப்பொருள் நிறைந்துள்ளது.

யாருக்கு நல்லது: சர்க்கரை நோயாளிகளுக்கு.

யாருக்கு வேண்டாம்: வேறு அலோபதி மருந்துகள் சாப்பிடும்போது இதனை சாப்பிடக்கூடாது. மருந்தின் தன்மையை முறியடிக்கும். அடிக்கடி சாப்பிட்டால் ஆண்மைக்குறைவு ஏற்படும்.

பலன்கள்: தொற்று நோய்களை தடுக்கும். கிருமிகளை அழிக்கும். வயிற்றில் பூச்சிகள் சேராமல் தடுக்கும்.



சுரைக்காய்

என்ன இருக்கு: நீர்ச்சத்து, புரதம், சுண்ணாம்புச் சத்து.

இது உடல் சூட்டைத் தணிக்கும். இதன் சுபாவம் குளிர்ச்சி. இது சிறுநீரைப் பெருக்கும். உடலை உரமாக்கும். மலச் சுத்தியாகும். தாகத்தை அடக்க வல்லது. ஆனால் இது பித்த வாயுவை உண்டு பண்ணும். கடுஞ்சுரைக்காய் என்று ஒரு வகை உண்டு. இது குளுமை செய்வது. தாகத்தை அடக்கும்.

யாருக்கு நல்லது: எல்லோரும் பகலில் மட்டும் சாப்பிடலாம்.

யாருக்கு வேண்டாம்: சளித் தொந்தரவு உள்ளவர்களுக்கு.

பலன்கள்: இதயத்துக்கு வலிமை சேர்க்கும். ரத்தத்தை வளப்படுத்தி தாது பலம் சேர்க்கும். ஆண்மைச் சக்தியை ஊக்குவிக்கும். சீதளத்தையும், பித்தத்தையும் போக்கும். ஆனால் அஜீரணத்தை உண்டாக்கும். இதன் விதைகள் மேகத்தைப் போக்கும். வீரிய விருத்தியை ஏற்படுத்தும். இவ்விதைகளை சர்க்கரையுடன் சேர்த்து சில நாட்கள் உண்டு வந்தால் ஆண்மையைப் (இழந்தவர்கள்) பெறுவார்கள்.



பூசணிக்காய்

என்ன இருக்கு: புரதம், கொழுப்பு

யாருக்கு வேண்டாம்: ஆஸ்துமா, தலைவலி, சைனஸ் நோயாளிகள், உடல் பருமனானவர்கள் சாப்பிடக் கூடாது.

யாருக்கு நல்லது: குழந்தைகளுக்கு. மூலச்சூடு நோய் உள்ளவர்களுக்கு மிகமிக நல்லது.

பலன்கள்: நரம்புகளுக்கு வலுவூட்டும். வயிற்றுப் புண்களை ஆற்றும். உடல் எடையைக் கூட்டும். வெண்பூசணியே நல்லது.

மருந்தில்லா மருத்துவம் ! ஆயுள் நீடிக்க மூலிகை மருத்துவம் - உங்களுக்காக...!




வெறும் வயிற்றில் இஞ்சி சாறில் தேன் கலந்து பருகினால் சோர்வு நீங்கும், மார்புச் சளி அகலும்.



சளிக் காய்ச்சல்

புதினா கீரையை நீரில் போட்டு கொதிக்க வைத்து டீ டிகாஷன் போல் செய்து சாப்பிட்டால் சளியால் வரும் காய்ச்சல் குணமாகும்.



இருமல், தொண்டை கரகரப்பு

பாலில் பூண்டைப் போட்டு காய்ச்சிக் குடித்தால் இருமல், ஜலதோஷம், தொண்டைக் கரகரப்பு போகும்.




சளி

பூண்டை தோல் உரித்து நசுக்கி, தக்காளி, உப்பு, தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து சூப் செய்து குடித்தால் சளி சீக்கிரம் குணமாகும்.



டான்சில்

வெள்ளைப் பூண்டு, இஞ்சி சாறு இரண்டையும் சேர்த்து அரைத்து இதனுடன் தேன் கலந்து காலை மாலை உணவுக்கு முன் சாப்பிட்டால் டான்சில் கரையும்.




வயிற்றுப் போக்கு

சிறிது கசகசாவுடன் நாட்டுச் சர்க்கரையை சேர்த்து வாயில் போட்டு சாப்பிடவும். இது போல் வெறும் வயிற்றில் காலை மட்டும் சாப்பிட்டு வந்தால் மூன்று நாளில் குணமாகும்.




வாயுக் கோளாறு

மிளகைப் பொடி செய்து பெருங்காய பவுடர் சேர்த்து தினமும் சுடுநீரில் கலந்து ஒரு தேக்கரண்டி சாப்பிட்டால் வாயுக் கோளாறு நீங்கும்.




நெஞ்சு சளி

தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும்.




தலைவலி

ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும்.




தொண்டை கரகரப்பு

சுக்கு, பால் மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட தொண்டை கரகரப்பு குணமாகும்.



தொடர் விக்கல்

நெல்லிக்காய் இடித்து சாறு பிழிந்து, தேன் சேர்த்து சாப்பிட்டால் தொடர் விக்கல் தீரும்.



வாய் நாற்றம்

சட்டியில் படிகாரம் போட்டு காய்ச்சி ஆறவைத்து அதனை ஒரு நாளைக்கு மூன்று வேளை வாய் கொப்பளித்து வந்தால் வாய்
நாற்றம் போகும்.

உடலில் உள்ள கெட்ட கொழுப்புக்கு ஆலிவ் ஆயில்..!




இதன் சிறப்பம்சம் மோனோ சாச்சுரேடட் ஃபேட்டி அமிலம் (Mono Unsaturated Fatty Acid) சுருக்கமாக - MUFA) 72% என்ற அளவில் இருப்பது. மேலும் வைட்டமின் E அதிக அளவில் இருகிறது.

உடலில் உள்ள கெட்ட கொழுப்பான LDL (Low-density lipoprotein லோ டென்சிடி லைபோபுரோடீன்) அளவை கார்டியா ரீஃபைன்ட் எண்ணை குறைக்கிறது. HDL(High-density lipoprotein ஹை டென்சிடி லைபோபுரோடீன்)என்னும் நன்மை செய்யும் கொழுப்பின் விகிதம் உடலில் அதிகரிக்கிறது.

ரத்த நாளங்களில் கொழுப்புப் படலம் படியாது. இதனால் இதயத்தின் தசைகளின் அழுத்தம் குறையும். சிரமப்பட்டு ரத்தத்தை இதயம் பம்ப் செய்யவேண்டி இருக்காது. ரத்தத்தின் அழுத்தமும் அதிகரிக்காமல் சீராக இருக்கும். இதனால் ரத்த நாளங்கள் தொடர்பான நோய்கள் தடுக்கப்படுகின்றன. மாரடைப்புக்கான சாத்தியங்களும் குறையும்.

வைட்டமின்கள் A, D, E மற்றும் K ஆகியவற்றை உட்கிரகிக்க இந்த எண்ணெய் உதவுகிறது.

இதில் உள்ள ஆன்டி - ஆக்ஸிடென்டுகள் புற்றுநோய் வருவதற்கான சாத்தியங்களை வெகுவாகக் குறைக்கின்றன.

சூரியனில் இருந்து வரும் தீமை விளைவிக்கும் கதிர்கள் தோலைக் கருப்பாகவும் தடிமனாகவும் மாற்றும். ஆனால் இந்த

ஆலிவ் எண்ணெய் தீமை செய்யும் கதிர்களின் பாதிப்பில் இருந்து தோலைக் காக்கிறது. கருமை நிறம் படிப்படியாகக் குறைந்து தோல் இயல்பு நிறத்துக்குத் திரும்பும்.தோல் மென்மையாகவும் இளமையாகவும் தோற்றம் அளிக்கும்.

தினந்தோறும் 2 டேபிள் ஸ்பூன் அளவுக்கு (28 கிராம்)ஆலிவ் எண்ணெயைப் பயன்படுத்தி வந்தால் நல்லது. அன்றாட சமையலில் அனைத்துப் பதார்த்தங்கள் தயாரிக்கவும் இந்த எண்ணெயைப் பயன்படுத்தலாம். வதக்குவது, பொறிப்பது, தாளிப்பது, பூரி செய்வது போன்றவற்றுடன் இட்லிப் பொடியைக் குழைத்துச் சாப்பிடுவதற்கும் ஏற்றது.

நோய் எதிர்ப்பு சக்தியைத் தூண்டும் கம்பு...!




இந்தியாவில் விளையும் தானிய வகைகளில் கம்பும் ஒன்று. வறட்சி தாண்டவம் ஆடும் காலங்களில் மக்களின் பசியைப் போக்கும் பொருளாக கம்பு இருந்து வந்துள்ளது. இது இந்தியா முழுவதும் பயிராகும் செடிவகையாகும். வறட்சியான பகுதிகளிலும் விளையக்கூடிய கம்பு பற்றியும் அதன் மருத்துவக் குணத்தையும் காண்போம்.

நம் முன்னோர்கள் தங்களுடைய உணவில் அதிகளவு தானிய வகைகளை சேர்த்து வந்தனர். காலையில் கம்பை கஞ்சியாக்கி அருந்தினர். சிலர் அரிசி உபயோகப்படுத்துவது போல் வேகவைத்து வடித்து சாப்பிட்டனர். ஆனால் இடைப்பட்ட காலத்தில் இந்த தானிய வகைகளை மறந்து சத்தற்ற உணவுகளை சாப்பிட்டு வந்தனர். நாவின் சுவையை அதிகம் விரும்பியதால் நோய்களின் வாழ்விடமாக நம் உடல் மாறிவிட்டது.

இரவு நேரங்களில் துங்காமல் கண் விழிப்பவர்கள், அதிக நேரம் ஒரே இடத்திலிருந்து வேலை செய்பவர்கள், அதிக சூடுடைய பகுதிகளில் வேலை செய்பவர்கள், அதிக மன அழுத்தம் கொண்டவர்களின் உடலானது அதிக உஷ்ணமடையும். இவர்கள் கம்பை கஞ்சியாகக் காய்ச்சி காலை வேளையில் அருந்தி வந்தால் உடல் சூடு குறையும்.

சோர்வு நீங்க...

மனச் சோர்வு இருந்தால் உடல் சோர்வு உன்டாகும். அதுபோல் வெயிலில் அதிகம் அலைகிறவர்கள், கடின வேலை செய்பவர்கள் அதிகம் சோர்வடைகின்றனர். இவர்கள் புத்துணர்வு பெற கம்பை கூழாக்கி, அதனுடன் மோர் கலந்து மதிய வேளையில் அருந்தி வந்தால் உடல் சோர்வு நீங்கி புத்துணர்வு அடைவர். இன்றும் சில இடங்களில் இதுபோல் கூழ் செய்து விற்பனை செய்து வருகிறார்கள்.

அஜீரணக் கோளாறு நீங்க...

அஜீரணக் கோளாறு கொண்டவர்கள் கம்பங் கஞ்சியை அருந்தி வந்தால் அஜீரணக் கோளாறுகள் நீங்கி நன்கு பசியெடுக்கும்.

வயிற்றில் புண்கள் உண்டானால் வாயிலும் புண்கள் ஏற்படும். மேலும் வயிற்று புண்களை குணப்படுத்தும் குணம் கம்புக்கு உண்டு. கம்புடன் அரிசி சேர்த்து நன்கு குழையும்படி சோறாக்கி மதிய உணவில் சேர்த்துக் கொண்டால் குடல்புண், வயிற்றுப்புண், வாய்ப்புண் குணமாகும்.

உடல் வலுவடைய....

உடல் வலுவடைய கம்பு மிகச் சிறந்த உணவாகும். அடிக்கடி கம்பங்கஞ்சி சாப்பிட்டு வந்தால் உடல் வலுவடையும்.

* கண் நரம்புகளுக்கு புத்துணர்வு கொடுத்து பார்வையை தெளிவாக்கும்.

* இதயத்தை வலுவாக்கும்.

* சிறுநீரைப் பெருக்கும்.

* நரம்புகளுக்கு புத்துணர்வைக் கொடுக்கும்.

* இரத்தத்தை சுத்தமாக்கும்.

* உடலில் தேவையற்ற நீரை வெளியேற்றும்.

* நோய் எதிர்ப்பு சக்தியைத் தூண்டும்.

* தாதுவை விருத்தி செய்யும்.

* இளநரையைப் போக்கும்.

அதிகமாக கம்பங்கஞ்சி அருந்தினால் சில சமயங்களில் இருமல், இரைப்பு போன்றவற்றை உண்டாக்கும். அதானால் அளவோடு சாப்பிட்டு ஆரோக்கியமாக வாழலாம்.

தயிர் தரும் சுக வாழ்வு பற்றிய தகவல் - உங்களுக்காக...!




* தயிரில் அதிகளவு ஊட்டச்சத்து, புரதம், கல்சியம் ஆகியன நிறைந்துள்ளன.

* தயிர் எளிதில் ஜீரணமாகும் தன்மை கொண்ட புரதத்தை அதிக அளவில் கொண்டுள்ளது. பால் ஒரு மணி நேரத்தில் 12 சதவிகிதம் மட்டுமே ஜீரணமாகும். ஆனால் தயிர் ஒரு மணி நேரத்தில் 91 சதவிகிதம் ஜீரணமாகும்.

* தயிரில் நிறைந்துள்ள நன்மை செய்யும் பாக்டீரியாக்களால் உடலின் ஜீரணத்தன்மையும் அதிகரிக்கும்.

* உடலில் வைட்டமின் ‘பி’ உறுஞ்சுவதற்கு- கிறகிப்பதற்கு தயிரிலுள்ள ‘பாக்டீரியாக்கள்’ ஊக்குவிக்கும்.

* தலையில் தயிர் கொண்டு ‘மஸாஜ்’ செய்வதன் மூலம் பொடுகுத் தொல்லை நீங்குவதுடன் தூக்கமும் நன்கு வரும்.

* சர்க்கரை, இரத்த அழுத்தம், உடல் பருமன் ஆகியவை உள்ளவர்கள் கொழும்புச் சத்து உள்ள பாலில் தயாரிக்கப்பட்ட தயிரையோ அல்லது மோரையோ சாப்பிட்டுவர நோய்கள் நீங்கும்.

* குழந்தைகளுக்கு சர்க்கரை அல்லது தேன் கலந்து கொடுத்து வந்தால் உடல் எடை அதிகரிக்கும்.

* தயிர் கொண்டு தோல்களுக்கு ‘மஸாஜ்’ செய்வதென்றால் தோல் நுண்ணிய பகுதிகளிலுள்ள அழுக்குகள் நீங்கி புத்துணர்ச்சி உண்டாகும்.

* ஒரு கரண்டி தேன், மசித்த பப்பாளி இவற்றுடன் இரண்டு கரண்டி தயிர் சேர்த்து முகத்தில் தடவி வர முகம் பொலிவு பெறும்.

* தயிருடன் தோடம்பழம் அல்லது எலுமிச்சம் பழச்சாறு கலந்தும் முகத்தில் தடவி வரலாம்.

* நரம்புகளுக்கும், எலும்புகளுக்கும் தயிர் அதிக நன்மை பயக்கக் கூடியது.

* தூக்கமின்மையில்லாதோர் தயிரை உணவில் சேர்த்துக் கொண்டால் நிம்மதியான ஆழ்ந்த தூக்கத்தைப் பெறுவர்.

கோடைக்கு இதமளிக்கும் நுங்கு - தெரிந்து கொள்வோம்...!


நுங்கு..!


இயற்கை, நமக்கு கிடைத்த பொக்கிஷம். இயற்கை அந்தந்த பருவ காலத்திற்கு ஏற்ப உணவு வகைகளை அளிப்பதில் ஆற்றல் மிக்கது. கோடைகாலம் வந்துவிட்டாலே நம் நினைவுக்கு வருவது நுங்குதான். நுங்கு கோடை காலத்தில் உடலுக்கு குளுமை தரக்கூடியதில் முக்கிய பங்கு வகிக்கிறது. தர்பூசணி, இளநீர், மோர் என்று பல கோடை காலத்தில் நம் உடலுக்கு குளிர்ச்சி தந்தாலும் நுங்குக்கு என்று தனிச் சிறப்பு பல உள்ளன.

எப்படி தென்னைமரத்தின் ஒவ்வொரு பகுதியும் நமக்கு உதவுகிறதோ அது போல் பனைமரத்தின் ஒவ்வொரு பகுதியும் நமக்கு உதவுகிறது. பனை மரத்தின் முற்றாத பனங்காயே நுங்கு ஆகும். இதற்கு என்று ஒரு பருவம் உள்ளது. இந்த பருவத்திலே நுங்கில் காணப்படும் வழுவழுப்பான, திரவ நிலை கலந்த திண!மப் பொருள் மிகவும் இனிப்பாகவும், உண!பதற்கு சுவையானதாகவும் இருக்கும். இந்தப் பருவம் தாண!டி சற்று முற்றிவிட்டால் இதன் சுவை குன்றிவிடும்.

பெண!பனையின் பாளையிலிருந்து இளம் பனங்காய்கள் உண!டாகும், இவை கொத்தாக குலைகளில் தோன்றும். இக்காய்கள் சில குறித்த மாதங்களிலேயே தோன்றும். இக் காய்கள் பொதுவாக மூன்று கண!கள் என்று அழைக்கப்படும் குழிகளைக் கொண!டிருக்கும். ஒரு சில காய்கள் இரண!டு கண!கள் கொண!டிருக்கும். பனங்காய்களை வெட்டி நுங்கை தனியாக எடுக்கலாம் அல்லது நுங்கை உறிஞ்சிக் குடிக்கலாம்.

நுங்கில் 10-11 சதவீதம் சர்க்கரை சத்தும், இரண!டு சதவீதம் புரதச் சத்தும் உள்ளன. மற்றும் கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின்டீ காம்ப்ளக்ஸில் உள்ள தையாமின், ரிபோப்ளோவின் போன்ற சத்துக்கள் அடங்கியுள்ளன.

பாடல் :

'நீர்வார் வியர்க்குருவை நீக்குமன லாக்குந்தோற்
சார்வா மயஞ்சீதந் தானொழிக்குஞ் - சேர்வார்
விழிக்கரையாற் துஞ்சளிக்கு மென்சுரத மானே‚
கழிக்கரையாந் தாளியினங் காய்."

- அகத்தியர் குணபாடம்.

பொருள் :

பனையின் இளங்காயிலுள்ள நுங்கின் நீரானது வியர்வைக்குருவை (வேர்க்குரு) நீக்கும். பசியைத் தரும். தோலுடன் இருக்கும் நுங்கு சீதக்கழிச்சலைப் போக்கும். நுங்கு சாப்பிட்டால் சிறுநீர் நன்கு பிரியும். மேலும் இது உடலுக்கு பலத்தை கொடுக்கும்.

* நுங்கின் மேல் தோல் துவர்ப்பாக இருக்கும். அதனை நீக்கி விட்டு பலர் சாப்பிடுவர். அந்த மேல் தோல் துவர்ப்போடு சாப்பிட்டால் நுங்கு வயிற்றுப் புண!ணை குணமாக்கும்.

* அம்மை நோயால் அவதிப்படுபவர்கள் இளம் நுங்கை சாப்பிட்டு வர உடல் குளிர்ச்சி ஏற்படும். குடலில் உள்ள சிறு புண!களையும் ஆற்றும்.

* கோடையில் ஏற்படும் வேர்க்குரு நீங்க நுங்கை தொடர்ந்து சாப்பிடலாம். இதனால் உடல் குளிர்ச்சி அடைந்து வேர்க்குரு பட்டுப் போகும்.

* நுங்கை பால் மற்றும் தேனுடன் சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும். நுங்கை சர்பத்தில் இட்டு சிலர் சாப்பிடுவர். இதுவும் உடலுக்கு குளிர்ச்சியைக் கொடுப்பதோடு சுவையான பானமாகவும் கருதப்படுகிறது.

* தாய்லாந்தில் பனை மரங்கள் அதிகம். அங்குள்ளவர்கள் நுங்கை எடுத்து பாட்டில்களில் பதப்படுத்தி உலகம் எங்கும் ஏற்றுமதி செய்கின்றனர்.

நாமும் நுங்கின் பயனை உணர்ந்து கோடை காலத்தில் உண!டு நம் உஷ்ணத்தை குறைப்போம்.

அல்சர் அவதிக்கு விடிவு..! - இதோ இதைப்படிங்க...


அல்சர் அவதிக்கு விடிவு..!


இரைப்பையில் சுரக்கும் அமிலங்கள்தான், நாம் உண்ணும் உணவின் செரிமானத்துக்கு உதவுகின்றன. இரைப்பை மற்றும் சிறுகுடலின் உட்பகுதியை மூடி உள்ள சளிச்சவ்வுகள் இந்த அமிலங்களின் தாக்குதலில் இருந்து இரைப்பை மற்றும் சிறுகுடலைப் பாதுகாக்கின்றன.

இந்த சளிச்சவ்வுகள் சரிவர செயல்படாதபோது அல்லது சளிச்சவ்வுகளின் தொடர்ச்சியில் இடைவெளி (breakdown)ஏற்படும்போது அமிலமானது இரைப்பை மற்றும் சிறுகுடலைப் பாதித்து சிவந்து வீக்கம் மற்றும் வலியுடன் கூடிய புண்ணை (ulcer) ஏற்படுத்துகிறது.

புண் தீவிரமடையும்போது அது இரைப்பை மற்றும் சிறுகுடலில் துளையை ஏற்படுத்தி ரத்தக் கசிவையும் ஏற்படுத்துகிறது.


காரணங்கள்:

அல்சரை உண்டாக்குவதில் ஹெலிகோபேக்டர் பைலோரி என்ற கிருமி முக்கியப் பங்கு வகிக்கிறது. தவிர, காரம், மசாலா நிறைந்த உணவுகளாலும் மதுபானம் அருந்துதல், புகையிலைப் பழக்கம், புகைப்பிடித்தல் மற்றும் கணையத்தில் ஏற்படும் கட்டியினாலும், மருத்துவக் கதிரியக்கத்திற்கு உட்படுத்துவதாலும், மனக்கவலை மற்றும் பரபரப்பினாலும் வயிற்றுப் புண் ஏற்படுகிறது.


அறிகுறிகள்:

குமட்டல், வயிற்றின் மேல் பகுதியில் வலி, உணவு சாப்பிட்ட ஓரிரு மணி நேரத்திற்குள் பசி, நோய் தீவிரமடையும்போது ரத்தம் கலந்த அல்லது கறுப்பு நிறத்தில் மலம் கழித்தல், நெஞ்சு வலி, ரத்த வாந்தி, சோர்வு, உடல் எடை குறைதல் காணப்படும்.



சித்த மருத்துவத்தில் எளிய தீர்வுகள்:

அரை ஸ்பூன் சுக்குத்தூளைக் கரும்புச்சாற்றில் கலந்து காலை வேளையில் அருந்தலாம்.

ஏலம், அதிமதுரம், நெல்லி வற்றல், சந்தனம் வால்மிளகு இவற்றைச் சம அளவு எடுத்துப் பொடித்து, அதைப்போல இரண்டு பங்கு சர்க்கரை சேர்த்து, 2 கிராம் வீதம் 3 வேளை உண்ணலாம்.

சீரகம், அதிமதுரம், தென்னம் பாளைப்பூ, சர்க்கரை சம அளவு எடுத்துப் பால்விட்டு அரைத்து, சிறு எலுமிச்சை அளவு எடுத்துப் பாலில் கலந்து பருகலாம்.

கறிவேப்பிலை, சீரகம், மிளகு, மஞ்சள், திப்பிலி, சுக்கு சம அளவு எடுத்துப் பொடித்து அதில் அரை ஸ்பூன் எடுத்து மோரில் கலந்து பருகலாம்.
வால்மிளகைப் பொடித்து அரை ஸ்பூன் எடுத்துப் பாலில் கலந்து உண்ணலாம்.

பிரண்டையின் இளந்தண்டை இலையுடன் உலர்த்திப் பொடித்து சம அளவு சுக்குத் தூள், மிளகுத் தூள் கலந்து அதில் அரை ஸ்பூன் எடுத்து வெண்ணெயில் கலந்து உண்ணலாம்.

கைப்பிடி அளவு வெண்நொச்சி இலையில் கல் உப்பைப் போட்டு வறுத்து, அடுப்பை அணைத்துவிட்டு சூடு இருக்கும்போதே அதில் மோரை ஊற்றி, தெளிவை இறுத்துப் பருகலாம்.

மணத்தக்காளிக் கீரையைப் பாசிப் பயிறு, நெய் சேர்த்துச் சமைத்து உண்ணலாம்.

பெருஞ்சீரகம், சுக்கு, மிளகு திப்பிலி, சம அளவு எடுத்துப் பொரித்து, 2 கிராம் எடுத்து, உணவிற்குப் பின் உண்ணலாம்.

சில்லிக்கீரை, பொன்னாங்கண்ணிக் கீரை இவற்றை அரைத்து, சுண்டைக்காய் அளவு எடுத்துக் கருப்பட்டி சேர்த்து வெள்ளாட்டுப் பாலில் கலந்து உண்ணலாம்.



சேர்க்க வேண்டியவை:

கோஸ், கேரட், வெண்பூசணி, தர்பூசணி, பப்பாளி, ஆப்பிள், நாவல், மாதுளம்பழம், வாழைப்பழம் தயிர், மோர். இள நுங்கு.



தவிர்க்க வேண்டியவை:

அதிகக் காரம், பொரித்த உணவுகள், அசைவ உணவுகள், தேன், புளி.


கடைப்பிடிக்க வேண்டியவை:

காலை உணவைத் தவிர்க்கக் கூடாது.

உரிய நேரத்தில் உணவை உண்ண வேண்டும்.

பரபரப்பைத் தவிர்த்தல் அவசியம்.

தினமும் குறைந்தது 2 லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும்.

சரியான நேரத்துக்குத் தூக்கம் அவசியம்.

கொலஸ்ட்ரால் இல்லாத சிக்கன் ரெசிபி சாப்பிட வேண்டுமா...!




 சிக்கன் ரெசிபியில் எலுமிச்சை சீரக ரோஸ்ட்டட் சிக்கன் மிகவும் ருசியாக இருக்கும். அதிலும் இதில் எலுமிச்சை சேர்த்திருப்பதால், புளிப்பு சுவையும், மணம் தரும் வகையில் சீரகமும், இதர மசாலாப் பொருட்களையும் சேர்த்து செய்வதால், இதன் சுவைக்கு அளவே இருக்காது. இப்போது இந்த எலுமிச்சை சீரக ரோஸ்ட்டட் சிக்கனை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:

சிக்கன் - 1/2 கிலோ (சற்று பெரிய துண்டுகளாக வெட்டியது)

சீரகப் பொடி - 2 டீஸ்பூன்

பூண்டு பொடி - 1 டீஸ்பூன்

வெங்காயப் பொடி - 1 டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

வர மிளகாய் - 3 (அரைத்தது)

சிவப்பு குடைமிளகாய் - 1 டீஸ்பூன் (அரைத்தது)

மிளகு தூள் - 1/2 டீஸ்பூன்

ஆலிவ் ஆயில் - 1 டேபிள் ஸ்பூன்

எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

முதலில் சிக்கனை நன்கு கழுவி, தண்ணீரை முழுவதும் வடித்து, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு ஒரு பௌலில் சீரகப் பொடி, அரைத்த வரமிளகாய், உப்பு, வெங்காயப் பொடி, பூண்டுப் பொடி மற்றும் சிவப்பு குடைமிளகாய் பொடி போன்றவற்றை போட்டு கலந்து, அதில் அந்த சிக்கனை போட்டு, 1 டேபிள் ஸ்பூன் ஆலிவ் ஆயிலை விட்டு, பிரட்டி, இறுதியாக எலுமிச்சை சாற்றை விட்டு கிளறி, ஒரு மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அந்த சிக்கன் துண்டுகளைப் போட்டு பொரித்து எடுக்க வேண்டும். இப்போது சுவையான எலுமிச்சை சீரக ரோஸ்டட் சிக்கன் ரெடி!!!

குறிப்பு:

பூண்டு மற்றும் வெங்காயப் பொடி கிடைக்காதவர்கள், வேண்டுமென்றால் பூண்டையும், வெங்காயத்தையும் அரைத்து சேர்க்கலாம்.

அழகு குறிப்புகள்:பெண்களின் வயிற்று சதை குறைய.....!




அழகை விரும்பாத மனிதர்களே இருக்க முடியாது. அழகான முகத்தை பெற இன்று பலவிதமான ரசாயனக் கலவைகளை முகத்தில் பூசுகின்றனர். சிலர் அழகு நிலையங்களை நோக்கி படையெடுக்கின்றனர்.

இதையே சாதகமாக வைத்து பணம் பறிக்க பலர் பல அழகுசாதனப் பொருட்களை உற்பத்தி செய்து சந்தையில் வைத்துள்ளார். இதை வாங்கி உபயோகப்படுத்தியவர்கள் யாரும் முழுப் பயன்களை அடைந்ததில்லை. இதற்கு மாறாக முகத்தை கெடுத்துக்கொண்டவர்கள் தான் ஏராளம்.

முகத்தையும் சருமத்தையும் பேணி பாதுகாக்க இயற்கை மூலிகைகள் நம்மிடையே நிறைந்து கிடக்கின்றன. இந்த மூலிகைகளை பயன்படுத்தி நீங்களே முக அழகைப் பெறலாம்.


  • உலர்ந்த மகிழம் பூ பொடி - 200 கிராம்
  • கிச்சிலி கிழங்கு பொடி - 100 கிராம்
  • கஸ்தூரி மஞ்சள் பொடி - 100 கிராம்
  • கோரை கிழங்கு பொடி - 100 கிராம்
  • உலர்ந்த சந்தனத் தூள் - 150 கிராம்


இவற்றை ஒன்றாக கலந்து காரம் இல்லாத அம்மியில் சுத்தமான பன்னீர் விட்டு அரைத்து சிறிய வில்லைகளாகத் தட்டி நிழலில் நன்றாக உலர்த்தி வைத்துக்கொண்டு, தினமும் குளிப்பதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பு பாலில் குழைத்து முகத்தில் தடவவும். அரை மணி நேரம் ஊரிய பின் குளிர்ந்த நீரால் முகத்தை கழுவி வரவேண்டும். சோப்பு போடக்கூடாது. இவ்வாறு தினமும் செய்து வந்தால் சில நாட்களில் முகம் பளபளக்கும். முகம் மென்மையாகும்.

இந்த மருத்துவ முறையை வராமித்ரர் அங்கரசளைகள் என்ற நூலில் கூறியுள்ளார்.

குளியல் பொடி

இன்று பல வாசனை சோப்புகளாலும், பவுடர்களாலும் உடலில் ஒவ்வாமை (அலர்ஜி) ஏற்பட்டு சருமம் பாதிக்கப்படுகிறது. இதனால் 30 வயதிலேயே முகச் சுருக்கம், தோல் சுருக்கம் ஏற்படுகிறது. மேலும் அன்றாடம் உண்ணும் உணவில் சத்துக்கள் இல்லாததாலும், சரியாக நீர் அருந்தாததாலும், சருமம் வறட்சியடைகின்றது. சரும பாதிப்புக்களுக்கு இயற்கை மூலிகைகளைக் கொண்ட குளியல் பொடிகளை உபயோகப்படுத்தினால் சருமம் பளபளப்பதுடன் பாதுகாப்பும் கிடைக்கிறது.

அருகில் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்

சோம்பு - 100 கிராம்

கஸ்தூரி மஞ்சள் - 100 கிராம்

வெட்டி வேர் - 200 கிராம்

அகில் கட்டை - 200 கிராம்

சந்தனத் தூள் - 300 கிராம்

கார்போக அரிசி - 200 கிராம்

தும்மராஷ்டம் - 200 கிராம்

விலாமிச்சை - 200 கிராம்

கோரைக்கிழங்கு - 200 கிராம்

கோஷ்டம் - 200 கிராம்
 
ஏலரிசி - 200 கிராம்

பாசிப்பயறு - 500 கிராம்

இவைகளை தனித்தனியாக காயவைத்து தனித்தனியாக அரைத்து பின் ஒன்றாகக் கலந்து வைத்துக்கொண்டு, தினமும் குளிக்கும் போது, தேவையான அளவு எடுத்து நீரில் குளித்து வந்தால் உடல் முழுவதும் நறுமணம் வீசும்.

இவ்வாறு தொடர்ந்து குளித்து வர சொறி, சிரங்கு, தேமல், படர்தாமரை, கரும்புள்ளி, வேர்க்குரு, கண்களில் கருவளையம், முகப்பரு, கருந்திட்டு முதலியவை மாறும். மேலும் உடலில் உண்டாகும் நாற்றமும் நீங்கும். மேனி அழகுபெறும்.

இது பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் பயன்படுத்த உகந்த வாசனை குளியல் பொடியாகும்.

பெண்களின் வயிற்று சதை குறைய

நம் இந்திய பெண்கள் பிரசவத்திற்கு பின் உடலை சரியாக பராமரிப்பதில்லை. இதனால் அவர்களின் உடல் பல உபாதைகளை சந்திக்க நேரிடுகிறது. அதுபோல் பிரசவத்திற்கு பின் அடிவயிற்றில் துணி சுற்றி கட்டாதவர்களுக்கும் அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்றவர்களும் பெல்ட் போடாதவர்களுக்கும் வயிற்றில் சதை அதிகமாக காணப்படும்.

இவர்கள் சின்ன வெங்காயத்தை பசுநெய்யில் வதக்கி நன்கு மெழுகு போல் அரைத்து அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து காலை மாலை என தினமும் இருவேளை ஒரு தேக்கரண்டி அளவு சாப்பிட்டு வந்தால் அடிவயிறு சதை குறைந்து உடல் அழகாகும்.

மனிதர்களை நிர்வாணமாகக் காட்டும் ஐபோன் ஆப்ளிகேசன்..! அதிர்ச்சி வீடியோ...




என்ன உலகமடா இது, ஆள்பாதி ஆடை பாதி என்பார்கள் இப்போது இந்த ஐபோன் ஆப்ளிகேசனால் அந்தப் பழமெழிக்குப் பங்கம் வந்துவிடும் போல இருக்கின்றதே, அட ஆமாங்க ஐபோனில் உள்ள ஒரு ஆப்பிளிக்கேசனைப் பயன்படுத்தி ஐபோன் கமராவின் மூலம் அடுத்தவர்களை ஆடையில்லாமல் பார்க்கமுடிகின்றதாம்……

இந்தக் கானொளியைப் பார்க்கப் பார்க்க எங்களுக்கு அதிர்ச்சி தாங்கமுடியவில்லை என்றால்ப் பார்த்துக்கொள்ளுங்கள்,இக் கானொளியில் ஒருவர் தனது ஐபோனில் nomaoஎனப்படும் ஆப்பிளிக்கேசனைப் பயன்படுத்தி படம்பிடிக்க ஆரம்பிக்கின்றார், திரையைப் பார்த்தால்!!!! ஐயோ அங்கே தெரிபவர்கள் எல்லோரும் ஆடையில்லாமல் இருக்கின்றனர், போதாக்குறைக்கு ஸ்கூட்டரில வாறவன் கூட ஆடையில்லாமலே தெரிகிறான் என்றால்ப் பார்த்துக்கொள்ளுங்கள்,

அடக் கருமாந்திரமே தொழில்நுட்ப வளர்ச்சி என்று சொல்லி கடைசில நம்மள ஆதிவாசிகளாக்கிப்போட்டானுகளே படுபாவிங்க..

இப்படி உன்மையாகவே ஒரு ஆப்பிளிக்கேசன் இருப்பதாக எமக்கு ஒருதகவல் கிடைத்திருக்கின்றது ஆனால் அந்த அப்பிளிக்கேசன் இதுதானா என்பதை எம்மால் உறுதிப்படுத்த முடியாமல் உள்ளது.

பெட்ரோல் பங்கில் ஏமாறாமல் இருப்பதற்கு.....!




தயவு செய்து நண்பர்களுடன் இத்தகவலை பகிர்ந்துகொள்ளுங்கள்....

படத்தில் காட்டப்பட்டுள்ளது போல் மேலே இருந்து பெட்ரோல் நிரப்புமிடத்தில் நீங்கள் பெட்ரோல் போட்டுக்கொள்கிறீர்களா...?

உங்களுக்கான எச்சரிக்கை இது...

நீங்கள் ஏமாற்றப்படுகிறீர்கள்...

இது போன்ற இடங்களில் மீட்டர் பெட்ரோல் நிரப்பும் நாசில் மீது இருக்கும்...

பெட்ரோல் நிரப்பும் நபர் உங்களிடம் எவ்வளவு என்று கேட்பார்...

நீங்கள் 100.00 ரூபாய் அல்லது 200.00 ரூபாய் என்று கூறுவீர்கள்...

மீட்டரில் இரண்டு வரிசைகளில் எண்கள் ஓடும்...

முதலில் உள்ளது லிட்டர் அளவு...

அதற்குக் கீழே உள்ளது தொகை...

பெட்ரோல் நிரப்பத் தொடங்குகையில் 0.0000 என்று இரண்டு வரிசைகளிலும் இருக்கும்...

நீங்கள் நூறு ரூபாய் என்று கூறினால்
பெட்ரோல் நிரப்பத் தொடங்கியதும்
லிட்டர் அளவு வருமிடத்தில் 1.0000 என்று வந்ததும் பெட்ரோல் நிரப்பும் நபர் நிறுத்தி விடுவார்...

நமக்கு அது ஒரு லிட்டர் என்பது தெரியாமல் நகர்ந்துவிடுவோம்...

அவ்வளவுதான் 100.00 ரூபாய்க்கு 30.00 ரூபாய் உங்களிடமிருந்துஉங்கள் அனுமதியுடன் திருடப்பட்டுவிட்டது...

200.00 ரூபாய்க்கு 60.00 ரூபாய் உங்களிடமிருந்துஉங்கள் அனுமதியுடன் திருடப்படும்...

நீங்கள் கூறும் 100.00-இன் மடங்குகளுக்கு ஏற்ப நீங்கள் ஏமாறும் தொகை 30.00-இன் மடங்குகளில் அதிகரிக்கும்...

ஏற்கனவே பெட்ரோல் விலை சுமை போதாதென்று இது வேறு...

மலையாள சேச்சியுடன் தனுஷ்...!




அனேகன் படத்தில் மலையாள உலகில் இருந்து குணச்சித்திர நடிகை ஒருவர் இறக்குமதி செய்யப்பட்டுள்ளார்.


மலையாள சினிமாக்களில் தவிர்க்க முடியாத ஒரு நடிகைதான் லேனா.


அக்காவாக, அண்ணியாக, இரண்டாவது கதாநாயகர்களின் மனைவியாக ஏதாவது ஒருவகையில் இவரது பங்களிப்பு மலையாள சினிமாக்களில் இருந்துகொண்டே இருக்கும்.


தமிழில் ரீமேக்கான ‘சென்னையில் ஒரு நாள்’ படத்தில் பிரகாஷ்ராஜின் மனைவியாக ராதிகா ஏற்றிருந்த கேரக்டரை தன் ஒரிஜினலான மலையாள படமான ‘ட்ராஃபிக்’கில், ரகுமானின் மனைவியாக ஏற்று நடித்தவர் இவர்தான்.


இப்போது இவர் தமிழில் கே.வி.ஆனந்த் இயக்கும் ‘அனேகன்’ படம் மூலமாக தன் காலடியை எடுத்து வைத்திருக்கிறார்.

சிவகார்த்திகேயனை வலம் வரும் முன்னனி நடிகைகள்...!




வருத்தப்படாத வாலிபர் சங்கம்' படத்திற்குப் பிறகு பொன்ராம் இயக்கும் படம் 'ரஜினி முருகன்'. இதில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடிக்கிறார்.


சமீபத்தில் திருக்குமரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த 'மான் கராத்தே' படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டுவிழா நடந்தது. அனிருத் இசையமைத்திருக்கும் இப்படப் பாடல்கள் மற்றும் டிரெய்லர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று ஹிட்டாகியுள்ளது.


தற்போது சிவகார்த்திகேயன் 'எதிர்நீச்சல்' பட இயக்குநர் துரைசெந்தில்குமார் இயக்கும் 'டாணா' படத்தில் போலீஸ் வேடத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார்.


'டாணா' படம் முடிந்ததும் 'ரஜினி முருகன்' படத்தில் நடிக்கவிருக்கிறார். இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக தமன்னா நடிக்கிறாராம். இதைப் பற்றி விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.