’காதலர்கள் நல ஆணையம்’ அமைக்க கெஜ்ரிவாலிடம் கோரிக்கை!

காதலர்கள் பூங்காக்களில் சுதந்திரமாக சுற்றி திரியவும், ஓட்டல்களில் அறை எடுத்து தங்கவும் அனுமதிக்க வேண்டும். டெல்லியில் உள்ள கல்வி நிறுவனங்களில் காதல் சம்பந்தப்பட்ட துறை அறிமுகப்படுத்த வேண்டும். அங்கு, உள்ளக் கிளர்ச்சியையும், உணர்வுகளையும் கட்டுப்படுத்துவது பற்றி கற்று தர வேண்டும்.குறிப்பாக காதலர்கள் குறை தீர்க்க ஆணையம் அமைக்க வேண்டும் என்று முதல்வர் கெஜ்ரிவாலுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.மேலும் இந்த கோரிக்கைகளை கெஜ்ரிவால் கனிவுடன் கேட்பார்....

புற்றுநோய் "கடல் அலை போல": உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை..!

கடல் அலை போல புற்றுநோய் உலகெங்கும் பரவி வருவதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.ஒவ்வொரு வருடமும் 14 மில்லியன் மக்கள் புற்றுநோயால் பாதிக்கப்படுவதாகவும் ஆனால் இந்த எண்ணிக்கை 2035 வாக்கில் 24 மில்லியனாக உயரும் என்றும் இந்த நிறுவனம் கூறுகிறது.உலகைப் பாதிக்கும் புற்றுநோயிலிருந்து கிட்டத்தட்ட பாதி அளவை வருமுன் தடுக்கமுடியும் என்று கூறும் உலக சுகாதார நிறுவனம், உடல் பருமன், மது அருந்துதல் மற்றும் புகை பிடித்தல் ஆகியவற்றை சமாளிக்க புதிய முயற்சிகள் வேண்டும்...

2ஜி ஊழல் : தொலைபேசி உரையாடல் ஒலிப்பதிவுகளை வெளியிட்டது ஆம் ஆத்மி..!

இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ஊழல் நடைபெற்றதாக கூறப்படும் விவகாரத்தில் கனிமொழி மீதான குற்றச்சாட்டுகளை உறுதிசெய்யும் ஆதாரங்கள் எனக்கூறி ஒலிப்பதிவு நாடாக்களை ஆம் ஆத்மி கட்சியின் தலைவர்களில் ஒருவரான வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் செவ்வாயன்று புதுடில்லியில் வெளியிட்டார்.ஆம் ஆத்மி கட்சி சார்பில் புதுடில்லியில் நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது வெளியிடப்பட்ட இந்த சில தொலைபேசி உரையாடல் ஒலிப்பதிவில், திமுகவின் மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி...

ஐ போன்' வெடித்து மாணவி காயம்..!

ஐ போன்' வெடித்து மாணவி காயம்அமெரிக்காவில் மைனே பகுதியில் உள்ள கென்னெ பங்க்ஸ் நகரில் நடுநிலைப் பள்ளி உள்ளது. இங்கு 8–வது வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் பள்ளிக்கு ‘ஐ போன்’ கொண்டு வந்திருந்தார்.அதை தனது சட்டை பையில் வைத்திருந்தார். வகுப்பறையில் இருந்த போது அந்த ‘ஐ போன்’ திடீரென வெடித்து தீப்பிடித்தது.இதனால் மாணவி அலறியதால் அங்கு பதட்டமும், பரபரப்பும் ஏற்பட்டது. உடனே, உடையில் பிடித்த தீயை ஆசிரியர்கள் அணைத்தனர். இதில், மாணவியின் தொடை மற்றும் பின்பகுதியில்...

உதவ நினைக்கும் உள்ளங்களுக்கு அழைப்பு விடுக்கும் ப்ரீத்தி..!

காலம் கருணை காட்டியிருந்தால், தேசிய பெண்கள் கிரிக்கெட் அணியின் நட்சத்திர முகமாகவும், தேசிய நீச்சல் சாம்பியனாகவும் நம்மிடையே அறிமுகமாகியிருக்க வேண்டியவர் இந்த ப்ரீத்திஸ்ரீனிவாசன்.ஆனால், இன்று முதுகெலும்பு செயலிழந்து போக, வாழ்க்கை, சக்கர நாற்காலியில் முடங்கிப் போக, தன்னம்பிக்கையை மட்டுமே நம்பி, நாட்களை நகர்த்திக் கொண்டிருக்கும் அதிசயப் பிறவி. தன்னைப் போலவே பாதிக்கப்பட்ட சக உயிர்களுடன், அன்பையும், ஆதரவையும் பகிர, ‘சோல்ஃப்ரீ’ என்கிற அமைப்பை நிறுவியிருக்கிறார்.www.soulfree.org...

சச்சின், விஞ்ஞானி ராவுக்கு பாரத ரத்னா விருது வழங்கப் பட்டது..!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர், விஞ்ஞானியும், பேராசிரியருமான சிஎன்ஆர் ராவ் ஆகியோருக்கு இந்தியாவின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருதினை வழங்கி கௌரவித்தார் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி.குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று காலை நடைபெற்ற நிகழ்ச்சியில், சச்சின் டெண்டுல்கர் (40), ராவ் (79) ஆகியோரது சீரிய பணியை கௌரவிக்கும் வகையில், பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.இதன் மூலம், பாரத ரத்னா விருது பெற்ற முதல் விளையாட்டு வீரர்...

இயற்கை தந்த பொக்கிஷம் இளநீர்..!

மனித குலத்துக்கு இயற்கை தந்த சுத்தமான சுவையான பானம் தான் இளநீர்.இளநீரில், செவ்விளநீர், பச்சை இளநீர், ரத்த சிவப்பில் உள்ள இளநீர் என பல்வேறு வகைகள் உள்ளன.*இளநீரில் எல்லா வகையிலும் மருத்துவக் குணங்கள் நிறைந்துள்ளன. அளவுக்கு அதிகமாக உள்ள வாதம், பித்தம், வெப்பத்தைத் தணிக்கும். உடலில் நீர்ச் சத்து குறையும் நிலையில் அதைச் சரி செய்யும்.*ஜீரண சக்தியை அதிகரிக்கும், சிறுநீரகத்தை சுத்திகரிக்கும், விந்துவை அதிகரிக்கும், மேக நோய்களைக் குணப்படுத்தும், ஜீரணக் கோளாறால்...

ஆயுள் காக்கும் 10 கட்டளைகள்..!

ஆயுள் காக்கும் 10 கட்டளைகள்தவறு செய்யாத மனிதன் இல்லை. ஆனால், 'இது தப்பு’ என்று தெரிந்தும், ஒரே விஷயத்தைத் திரும்பத் திரும்பச் செய்தால்? நம் ஆரோக்கியத்துக்கு நாமே வேட்டுவைக்கக்கூடிய 'தவறுகள்’ என்னென்ன என்பது குறித்து, தமிழகத்தின் பல்வேறு டாக்டர்களிடம் கேட்டோம். சென்னையைச் சேர்ந்த புற்றுநோய் சிறப்பு மருத்துவர் ராஜா, பல் மருத்துவர் ரவிவர்மா, புதுச்சேரியைச் சேர்ந்த பொது நல மருத்துவர் நாகராஜன், திருநெல்வேலியைச் சேர்ந்த குழந்தைகள் நல மருத்துவர் கவிதா,...

அல்சர், அசிடிட்டிக்கு என்ன சாப்பிடலாம் - ரெசிப்பிக்களின் பட்டியல்...

சிறு குழந்தைகளுக்கும் 'அசிடிட்டி’ ஏற்படுவது அதிர்ச்சியான விஷயம். அல்சர், அசிடிட்டி போன்ற வயிறு மற்றும் இரைப்பை சம்பந்தப்பட்ட பிரச்னை உள்ளவர்கள், என்ன சாப்பிடலாம் என்பதை விளக்குகிறார், சென்னை ஹெயின்ஸ் நியூட்ரிலைஃப் கிளினிக்கின் உணவு ஆலோசகர் தாரிணி கிருஷ்ணன்.''பெப்டிக் அல்சர் என்று அழைக்கப்படும் வயிற்றுப் புண்ணுக்கும் 'அசிடிட்டி’ என்ற வயிற்றில் சுரக்கும் அமிலப் பிரச்னைக்கும் மூல காரணம், 'ஸ்ட்ரெஸ்’. அடுத்தது, முறையற்ற உணவுப் பழக்கம். சரியான நேரத்துக்கு...

மேரி லீக்கி- ஆதி மனிதனின் பிறப்பைக் கண்டறிந்தவர்...!

 இந்த உலகில் மனித இனம் எங்கே தோன்றியது? பூமிப் பந்தின் மூதாய் தோன்றிய இடம் எது? கிழக்கு ஆப்பிரிக்கா. இதைக் கண்டறிந்தவர் ஒரு பெண். அவர் மேரி லீக்கி. மனிதகுலப் பரிணாம வளர்ச்சியின் அறிவியல் பின்புலத்தைக் கண்டறிந்ததற்காகப் புகழ்பெற்றவர்."நான் பொருள்களைத் தேடித் தோண்டுகிறேன். நான் அதிகம் அறியும் ஆர்வத்துடன் இருக்கிறேன். அதன் பிறகு நான் கண்டறிந்ததை வரைய விரும்புகிறேன்" என்று தனது பணி பற்றிச் சுருக்கமாக அவர் விவரித்தார். நிலத்தைத் தோண்டி ஆராய்வதுதான்...

அமுக்குவான் பேய்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா..?

இரவு நீங்கள் தூங்கிக் கொண்டிருக்கும்போது, யாரோ உங்கள் மேல் ஏறி அழுத்துவது போல் இருக்கும். உங்களால் கண்ணைத் திறக்க முடியாது. கத்தலாம் என்றாலும் குரல் வெளியே வராது. சரி, திரும்பிப் படுக்கலாம் என்று நினைத்தாலும் திரும்பி படுக்க முடியாது. ஒரு நிமிடம் கழித்துத்தான் உங்களால் எதுவும் செய்யமுடியும். எழுந்து பார்த்தால் யாரும் அருகில் இருக்கமாட்டார்கள். என்னடா இது என்று திகைத்திருப்பீர்கள். இதுதான் அமுக்குவான் பேய். உயிரைக் கொல்லும் அளவுக்கு கொடூரமான...

“பேஸ்புக்” தனது 10-வது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறது...

 சமூக வலைத்தளத்தில் வல்லரசாக வலம் வரும் “பேஸ்புக்” தனது 10-வது பிறந்த நாளை செவ்வாய்க் கிழமை கொண்டாடுகிறது. அமெரிக்காவைச் சேர்ந்த மார்க் ஜுகர்பெர்க் 2004-ம் ஆண்டு பிப்ரவரி 4-ம் தேதி தனது சக நண்பர்களுடன் சேர்ந்து ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் ஒரு சிறிய அறையில் பேஸ்புக் இணையதளத்தைத் தொடங்கினார்.அப்போது பல்கலைக்கழக மாணவராக இருந்த மார்க், சக மாணவர்களுக்கிடையே ஓர் இணைப்பை ஏற்படுத்த இந்த இணையதளத்தை உருவாக்கினார். இப்போது பேஸ்புக்வாசிகளின் எண்ணிக்கை 120...

கரப்பான் பூச்சியிலிருந்து மின்சாரம்...!!!

கரப்பான் பூச்சிக்கு இரு ’ மீசைகள்’ இருப்பதை நீங்கள் கவனித்திருக்கலாம். இவை உணர் உறுப்புகள் (Antennae) முன்புறத்தில் தடை ஏதேனும் உள்ளதா என்பதை கரப்பான் பூச்சி இந்த உணர் உறுப்புகள் மூலம் அறிந்து கொள்ளும்.இதே போல கரப்பான் பூச்சியின் பின்புறத்தில் வேறு வித உணர் உறுப்புகள் (cerci) உள்ளன. பின்புறத்திலிருந்து தன்னைப் பிடிக்க ஏதேனும் வருகிறதா என்பதை இந்த உறுப்புகள் கண்டறிந்து தெரிவிக்கும்.நீங்கள் கரப்பான் பூச்சியை அடிக்க முயலும் போது அது இந்த உணர் உறுப்புகளை...

என் வாழ்க்கை மாறிவிட்டது: 'சூப்பர் சிங்கர்' திவாகர் நெகிழ்ச்சி..!

 விஜய் டி.வியில் ‘சூப்பர் சிங்கர் சீசன் 4’ - ன் இறுதிச்சுற்றில் வெற்றி யாளராக தேர்வானதில் மகிழ்ச்சியாக இருக்கிறார் திவாகர். இதில் வெற்றி பெற்றது குறித்து ‘தி இந்து’விடம் பேசிய அவர், “இவ்வளவு நாட்கள் இதற்காகத்தான் காத்திருந் தேன். என்னுடைய கஷ்டம், போரட்டத்தோடு சேர்ந்து எல்லோருடைய ஆதரவும் இணைந் ததால் இந்தவெற்றி கிடைத்திருக் கிறது. இன்றிலிருந்து என் வாழ்க்கை மாறிவிட்டது. என்னிடம் இப்போ சொந்தமாக பரிசாக கிடைத்த ஒரு வீடு இருக்கிறது என்று சொல்லிக்...

பேஸ்புக்கின் தோற்றம் பற்றிய முழுக் கதை இது தான்..!

 இன்றைய சமூகவலைதள உலகின் ராஜா என்றழைக்கப்படும் ஃபேஸ்புக் இணையதளம் 1 பில்லியனுக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது.இன்று இணையத்தை பயன்படுத்தும் பெரும்பாலானோருக்கு தெரிந்த இவ்வளவு பெரிய சமூக வலைதளமான ஃபேஸ்புக் உருவான கதையை பார்க்கலாம்.ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருந்த மாணவர் மார்க் ஸுக்கர்பெர்க் (Mark Zuckerberg)என்பவரால் யதேச்சையாக உருவாக்கப்பட்டதுதான் இந்த ஃபேஸ்புக்(FACEBOOK).தன்னை கைவிட்டுப்போன காதலியின் நினைவிலிருந்து...

புராணங்களுக்கு ஆதாரங்கள் தேவையில்லை, ஆனால் வரலாறுகளுக்கு..?

புராணங்களுக்கு ஆதாரங்கள் தேவையில்லை. வரலாறுகளுக்கு நிச்சயம் ஆதாரம் தேவை. மன்னர்கள் வரலாறு, இந்தியாவின் சுதந்திர வரலாறுகளை சொல்லும் வரலாற்று ஆய்வாளர்களுக்கு ஆதாரமாய் கம்பீரமாய் நிற்கிறது வேலூர் கோட்டை.வேலூர் மாநகரின் மையத்தில் 133 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ளது வேலூர் கோட்டை. கி.பி 16 ஆம் நூற்றாண்டில் விஜயநகர பேரரசு தமிழகத்தின் ஒரு பகுதியை ஆண்டுக்கொண்டுயிருந்தபோது வேலூர், திருப்பதி, சென்னை போன்றவை விஜயநகர பேரரசுவின் கட்டுப்பாட்டில் இருந்தது....