பஞ்சாபில் உள்ள வங்கிகளிடம் கல்விக்கடன் பெற்று அதை திரும்ப செலுத்த தவறியவர்களின் பெயர்கள் மற்றும் போட்டோக்களை வெளியிடக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளன.
நிதியியல் சேவைத்துறை, நிதி அமைச்சகம், மாநில வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு ஆகியவற்றின் கூட்டம் நடந்தது. அதில், கல்விக்கடனை திருப்பிச் செலுத்தாத மாணவர்களின் பெயர்கள் மற்றும் அவர்களின் போட்டோக்கள் வெளியிடும் சில வங்கிகளின் நடவடிக்கைகள் கண்டிக்கத்தக்கது என கூறப்பட்டுள்ளது.
கடன் கட்டாமல் நிற்கும் மாணவர்களின் சூழ்நிலைகளை தெரிந்து கொள்ளாமல், அவர்களது எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும் வகையில் வங்கிகள் இவ்வாறு செய்ல்படுவதை உடனடியாக நிறுத்திக்கொள்ளவேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இனிமேலாவது வங்கிகள் இவ்விஷயத்தில் மென்மையான போக்கை கடைபிடிக்க வேண்டும். வங்கிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் கல்விக் கடன் கேட்பவர்களின் சொத்துக்களை வருடந்தோறும் ஆய்வு செய்ய வேண்டும் என்றும் இந்த கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பஞ்சாபில் 2013 டிசம்பர் 31ந் தேதி வரை ரூபாய் 1,065.09 கோடி அளவுக்கு கல்விக் கடன் நிலுவையில் உள்ளது என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.